என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முசிறி அருகே மணல் திருடிய 5 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்14 Nov 2019 3:55 PM GMT (Updated: 14 Nov 2019 3:55 PM GMT)
முசிறி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மொபட்டுகளில் மணல் மூட்டைகளை கடத்திய 5 வாலிபர்களை கைது செய்தனர்.
முசிறி:
முசிறி அருகே வீரமணிப்பட்டி பகுதியில் அய்யாற்றில் மர்மநபர்கள் மொபட்டுகளில் மணல் கடத்துவதாக முசிறி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்துறையினர் வீரமணிப்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது முசிறியை அடுத்த நெய்வேலி செல்லும் சாலையில் வீரமணிப்பட்டி மயானம் அருகே 5 பேர் மொபட்டுகளில் மணல் மூட்டைகளை கடத்தி சென்றனர். அவர்களை போலீசார் சுற்றி பிடித்தனர். விசாரித்ததில் அவர்கள் சின்னகொடுந்துறையை சேர்ந்த புஷ்பராஜ் (வயது19), சிவகுமார் (26), கிருஷ்ணன் (24), பஞ்சப்பட்டி கார்த்திக் (20), வீரமணிப்பட்டி லோகேஸ்வரன் (19) என்பது தெரியவந்தது.
இதையடுத்து திண்ணக்கோணம் கிராம நிர்வாக அதிகாரி விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் 5 பேரையும் கைதுசெய்து மணல் திருட பயன்படுத்திய மொபட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X