என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அய்யலூர் அரசு பள்ளியில் லேப்டாப் வழங்ககேட்டு மாணவர்கள் திடீர் முற்றுகை
வடமதுரை:
அய்யலூர் அரசு பள்ளியில் இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் 2018-19-ம் கல்வி ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் லேப்டாப் வழங்கப்பட்டது. ஏற்கனவே கடந்த மாதம் இப்பள்ளி முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு லேப்டாப் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு பயின்ற மாணவர்கள் தங்களுக்கு லேப்டாப் வழங்க வலியுறுத்தி நேற்று பள்ளிக்கு திரண்டு வந்தனர். பள்ளியை அவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வடமதுரை போலீசார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு கூறியதன் அடிப்படையில் லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பயின்ற மாணவர்களுக்கு அரசு லேப்டாப் அனுப்பியவுடன் முறைப்படி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்