என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரவாயல் சுங்கச்சாவடியில் மோதல்- தேமுதிக நிர்வாகி மீது தாக்குதல்
Byமாலை மலர்9 Nov 2019 12:00 PM GMT (Updated: 9 Nov 2019 12:00 PM GMT)
மதுரவாயல் சுங்கச்சாவடியில் ஏற்பட்ட தகராறில் தே.மு.தி.க. நிர்வாகியை தாக்கிய தி.மு.க. பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.
போரூர்:
கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்கிற ஆரோக்ய ரவி (வயது 42). சொந்தமாக பேக்கரி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தே.மு.தி.க. வர்த்தக அணியின் மாநில துணை தலைவராக உள்ளார்.
ரவி நேற்று தனது காரில் அம்பத்தூர் சென்று விட்டு மாலை 5 மணி அளவில் வீடு திரும்பும் வழியில் மதுரவாயல் சுங்கச்சாவடியில் வரிசையில் காத்து நின்றார்.
அப்போது ரவி காரின் பின்னால் புதுச்சேரி பதிவு எண் கொண்ட மற்றொரு காரில் இருந்த நபர் “ஹாரன்” அடித்தார். உடனடியாக ரவி ஏன் “ஹாரன்” அடிக்கிறீர்கள் முன்னால் நிற்கும் வாகனம் சென்றால் தான் போக முடியும் என்று கூறினார்.
மீண்டும் காரில் இருந்த நபர் ஹாரன் அடித்துக்கொண்டே இருந்ததால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து பின்னால் காரில் இருந்த நபர் இறங்கி வந்து ரவியின் முகத்தில் சரமாரியாக குத்தினார். பின்னர் காரில் ஏறி வேகமாக சென்றுவிட்டார்.
இதில் வலது கண் புருவத்தின் மேல் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்த ரவி அலறித்துடித்தார். இந்த மோதல் சம்பவம் காரணமாக சுங்கச்சாவடியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய ரவி மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சுங்கச்சாவடி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து காரின் பதிவு எண்ணை கொண்டு விசாரணை நடத்தியதில் ரவியை தாக்கியது புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகரான பழனிக்குமார் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்கிற ஆரோக்ய ரவி (வயது 42). சொந்தமாக பேக்கரி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தே.மு.தி.க. வர்த்தக அணியின் மாநில துணை தலைவராக உள்ளார்.
ரவி நேற்று தனது காரில் அம்பத்தூர் சென்று விட்டு மாலை 5 மணி அளவில் வீடு திரும்பும் வழியில் மதுரவாயல் சுங்கச்சாவடியில் வரிசையில் காத்து நின்றார்.
அப்போது ரவி காரின் பின்னால் புதுச்சேரி பதிவு எண் கொண்ட மற்றொரு காரில் இருந்த நபர் “ஹாரன்” அடித்தார். உடனடியாக ரவி ஏன் “ஹாரன்” அடிக்கிறீர்கள் முன்னால் நிற்கும் வாகனம் சென்றால் தான் போக முடியும் என்று கூறினார்.
மீண்டும் காரில் இருந்த நபர் ஹாரன் அடித்துக்கொண்டே இருந்ததால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து பின்னால் காரில் இருந்த நபர் இறங்கி வந்து ரவியின் முகத்தில் சரமாரியாக குத்தினார். பின்னர் காரில் ஏறி வேகமாக சென்றுவிட்டார்.
இதில் வலது கண் புருவத்தின் மேல் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்த ரவி அலறித்துடித்தார். இந்த மோதல் சம்பவம் காரணமாக சுங்கச்சாவடியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய ரவி மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சுங்கச்சாவடி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து காரின் பதிவு எண்ணை கொண்டு விசாரணை நடத்தியதில் ரவியை தாக்கியது புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகரான பழனிக்குமார் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X