search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    புதுவை அருகே வயல்காட்டில் தொழிலாளி அடித்து கொலை

    புதுவை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அபிஷேகப் பாக்கத்தில் இருந்து கரிக்கலாம்பாக்கம் செல்லும் ரோட்டில் தமிழக பகுதியான புதுக்கடையை அடுத்த மேட்டுப்பாளையம் கிராமம் உள்ளது.

    இங்குள்ள நெல்வயலில் இன்று காலை நிர்வாண நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக அந்த வழியாக சென்ற விவசாயிகள் ரெட்டிச்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பிணமாக கிடந்தவரின் முகம் வயல் சேற்றில் மூழ்கிய படி இருந்தது. மேலும் தலை, கை உள்ளிட்ட இடங்களில் காயம் இருந்தது. அருகில் இருந்த கரும்பு தோட்டமும் சேதமாகி இருந்தது. யாரோ அவரை அடித்து கொலை செய்து நெல் வயலில் வீசி சென்றுள்ளனர். விசாரணையில் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தவர் பற்றிய விவரம் தெரிய வந்தது.

    அவரது பெயர் முத்தழ்வராயன் (வயது 45). இவரது சொந்த ஊர் விழுப்புரம் சாணிக்கிராமம் ஆகும்.

    கூலித்தொழிலாளியான முத்தழ்வராயன் கடந்த 20 வருடங்களாக தனது மனைவி சுஜாதாவுடன் கரிக்கலாம்பாக்கம் புது நகரில் வசித்து வந்தார்.இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது.

    உடல்நிலை பாதிக்கப்பட்ட முத்தழ்வராயன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். அவரை அவரது மனைவி சுஜாதா பல இடங்களில் தேடி வந்தார்.

    இந்த நிலையில் முத்தழ்வராயன் வயல்வெளியில் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை அறிந்த சுஜாதா மற்றும் அவரது குடும்பத்தினர் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தழ்வராயனை அடித்து கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×