என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூர் பள்ளிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்க கலெக்டர் உத்தரவு
Byமாலை மலர்6 Nov 2019 1:59 PM GMT (Updated: 6 Nov 2019 1:59 PM GMT)
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் சாந்தா உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் சாந்தா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
மழைக்காலம் தொடங்கியுள்ளதால், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதையொட்டி, டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றனர். மேலும், அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும்.
சனிக்கிழமை தோறும் பள்ளிகளில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி மேற்கொண்டு குப்பைகளை அகற்ற வேண்டும். 5 நாள்களுக்கும் மேலாகத் தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பு இருந்தால் மாணவர்களை மருத்துவ மனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோர்களுக்கு உரிய தகவல் அளிக்க வேண்டும். அதோடு மட்டுமின்றி டெங்கு, மலேரியா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலை தடுப்பது குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X