search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் சாந்தா"

    பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்க சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாளை நடக்கிறது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்க சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாளை 27-ந்தேதி காலை 10.15 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு நேரில் அளிக்கலாம். 

    இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஆவன செய்யப்படும். எனவே மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். 

    இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    ×