என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியகுளம் அருகே தந்தையை அடித்து கொன்ற மகன் கைது
Byமாலை மலர்4 Nov 2019 7:36 AM GMT (Updated: 4 Nov 2019 7:36 AM GMT)
தேவதானப்பட்டியில் குடிபோதையில் தகராறு செய்த தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகில் உள்ள காமக்காபட்டி அம்சாபுரம் பொன்னையாதேவர் தெருவை சேர்ந்தவர் தனபாலன் (வயது54). இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு திவாகர் (25), ஸ்ரீதரன் (22) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
திவாகருக்கு திருமணமாகி மனைவியுடன் கொடைக்கானல் பள்ளங்கியில் வசித்து வருகிறார். தனபாலனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் தினமும் குடித்து விட்டு வந்து தனது மனைவி பஞ்சவர்ணத்திடம் தகராறு செய்துள்ளார்.
வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வந்ததால் கடன் பிரச்சனை அதிகரித்தது. இதனால் திவாகர் பள்ளங்கியில் இருந்த நிலங்களை விற்று கடனை அடைத்துள்ளார்.
நேற்று இரவு குடித்து விட்டு வீட்டிற்கு வந்த தனபாலன் வழக்கம்போல் தனது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்துள்ளார். இதனை அவரது 2-வது மகன் ஸ்ரீதரன் தட்டிகேட்டார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் உருட்டு கட்டையால் தந்தை என்றும் பாராமல் தனபாலனை தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே தனபாலன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தேவதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தனபாலன் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திவாகர் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீதரனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகில் உள்ள காமக்காபட்டி அம்சாபுரம் பொன்னையாதேவர் தெருவை சேர்ந்தவர் தனபாலன் (வயது54). இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு திவாகர் (25), ஸ்ரீதரன் (22) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
திவாகருக்கு திருமணமாகி மனைவியுடன் கொடைக்கானல் பள்ளங்கியில் வசித்து வருகிறார். தனபாலனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் தினமும் குடித்து விட்டு வந்து தனது மனைவி பஞ்சவர்ணத்திடம் தகராறு செய்துள்ளார்.
வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வந்ததால் கடன் பிரச்சனை அதிகரித்தது. இதனால் திவாகர் பள்ளங்கியில் இருந்த நிலங்களை விற்று கடனை அடைத்துள்ளார்.
நேற்று இரவு குடித்து விட்டு வீட்டிற்கு வந்த தனபாலன் வழக்கம்போல் தனது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்துள்ளார். இதனை அவரது 2-வது மகன் ஸ்ரீதரன் தட்டிகேட்டார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் உருட்டு கட்டையால் தந்தை என்றும் பாராமல் தனபாலனை தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே தனபாலன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தேவதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தனபாலன் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திவாகர் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீதரனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X