என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மரக்காணம் அருகே குண்டர் தடுப்பு சட்டத்தில் ரவுடி கைது
Byமாலை மலர்31 Oct 2019 5:04 PM GMT (Updated: 31 Oct 2019 5:04 PM GMT)
மரக்காணம் அருகே குண்டர் தடுப்பு சட்டத்தில் ரவுடி கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்:
மரக்காணம் தாலுகா டி.நல்லாளம் தைலந்தோப்பு தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 42). ரவுடி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை வழக்கில் பிரம்மதேசம் போலீசார் இவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஏற்கனவே இவர் மீது கொலை முயற்சி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே அவருடைய குற்றச்செயல்களை தடுக்கும்பொருட்டு அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மகேந்திரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
இதையடுத்து மகேந்திரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் மத்திய சிறையில் இருக்கும் ரவுடி மகேந்திரனுக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X