search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலூர் மத்திய சிறை"

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு எண்ணூர் தனசேகரன் அறையை சிறைக்காவலர்கள் சோதனை செய்த போது செல்போனை பறிமுதல் செய்தனர்.
    • அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை தின்று விட்டதாக சிறை காவலர்களிடம் எண்ணூர் தனசேகரன் தெரிவித்தார்.

    கடலூர்:

    கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறை சாலை உள்ளது. இந்த சிறைசாலையில் 100-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த சிறைசாலையில் 24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது அறையில் உதவி ஜெயிலர் மணிகண்டன் திடீரென சோதனை நடத்த சென்றார். அப்போது அவரை எண்ணூர் தனசேகரன் தாக்க முயன்றார்.

    மேலும் ஜெயிலர் மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் பாட்டில்களை வீசி கொலை முயற்சி நடந்தது. இந்த வழக்கிலும் எண்ணூர் தனசேகரனுக்கு தொடர்பு உள்ளது. எனவே அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு எண்ணூர் தனசேகரன் அறையை சிறைக்காவலர்கள் சோதனை செய்த போது செல்போனை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு எண்ணூர் தனசேகரன் தற்கொலை செய்ய முயற்சி செய்தார். இதனால் எண்ணூர் தனசேகரனை சிறைக்காவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    கடந்த 7-ந்தேதி தனசேகரன் மீது உள்ள வழக்கு சம்பந்தமாக சென்னை பொன்னேரி நீதிமன்றத்தில் போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மாலை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    அப்போது சிறைக்காவலர்கள் எண்ணூர் தனசேகரன் அறையை மீண்டும் சோதனை செய்தனர். சோதனையில் அவரது அறையில் செல்போன் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சிறைக்காவலர்கள் அந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் இன்று எண்ணூர் தனசேகரன் மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை தின்று விட்டதாக சிறை காவலர்களிடம் தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சிறைக் காவலர்கள் அவரை மீட்டு சிறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் உண்மையிலேயே அதிக மாத்திரைகளை தின்றாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் கடலூர் மத்திய சிறையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு எண்ணூர் தனசேகரன் அறையை சிறைக்காவலர்கள் சோதனை செய்தபோது செல்போனை பறிமுதல் செய்தனர்.
    • அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு எண்ணூர் தனசேகரன் தற்கொலை செய்ய முயற்சி செய்தார்.

    கடலூர்:

    கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் 100-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த சிறைச்சாலையில் 24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது அறையில் உதவி ஜெயிலர் மணிகண்டன் திடீரென சோதனை நடத்த சென்றார். அப்போது அவரை எண்ணூர் தனசேகரன் தாக்க முயன்றார்.

    மேலும் ஜெயிலர் மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் பாட்டில்களை வீசி கொலை முயற்சி நடந்தது. இந்த வழக்கிலும் எண்ணூர் தனசேகரனுக்கு தொடர்பு உள்ளது. எனவே அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு எண்ணூர் தனசேகரன் அறையை சிறைக்காவலர்கள் சோதனை செய்தபோது செல்போனை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு எண்ணூர் தனசேகரன் தற்கொலை செய்ய முயற்சி செய்தார். இதனால் எண்ணூர் தனசேகரனை சிறைக்காவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    நேற்று தனசேகரன் மீது உள்ள வழக்கு சம்பந்தமாக சென்னை பொன்னேரி நீதிமன்றத்தில் போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மாலை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    அப்போது சிறைக்காவலர்கள் எண்ணூர் தனசேகரன் அறையை மீண்டும் சோதனை செய்தனர். சோதனையில் அவரது அறையில் செல்போன் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சிறைக்காவலர்கள் அந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து சிறைக்காவலர்கள் கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். எண்ணூர் தனசேகரன் இருந்த அறையிலிருந்து மீண்டும் சிறைக்காவலர்கள் செல்போன் பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் 2 பேட்டரிகள், சிம் கார்டு பறிமுதல் செய்ததுடன், கடலூர் முதுநகர் போலீசில் புகார் கொடுத்தனர்.
    • சிறைசாலை வளாகத்தில் செல்போன் மற்றும் பேட்டரி , சிம் கார்டு ஆகியவற்றை புதைத்து வைத்தது பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் என்பது தெரியவந்து.

    கடலூர்:

    கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையிலான சிறை காவலர்கள் மத்திய சிறை வளாகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வெளிச் சிறை எண் 1 பகுதி வளாக கழிவறை முன்பு உள்ள செடி அருகில் மண்ணை தோண்டி பார்த்ததற்கான அறிகுறி தெரிந்தது. இதனால் சந்தேகமடைந்த சிறை காவலர்கள் மண்ணை தோண்டி பார்த்தபோது, அங்கு 1 செல்போன் மற்றும் 2 பேட்டரிகள், சிம் கார்டு ஆகியவற்றை புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறை காவலர்கள் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் 2 பேட்டரிகள், சிம் கார்டு பறிமுதல் செய்ததுடன், கடலூர் முதுநகர் போலீசில் புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சிறைசாலை வளாகத்தில் செல்போன் மற்றும் பேட்டரி , சிம் கார்டு ஆகியவற்றை புதைத்து வைத்தது பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் என்பது தெரியவந்து. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜெயிலர் மணிகண்டனுக்கும், பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரனுக்கும் முன் விரோதம் இருந்து வந்த நிலையில் சிறைசாலையில் பணிபுரிந்து வந்த வார்டன் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் ஜெயிலர் கடந்த ஆண்டு மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் ஊற்றி அவரது குடும்பத்தினரை கொலை செய்ய முயற்சித்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு தூண்டுகோலாக பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

    • கடலூர் மத்திய சிறையில் போலீஸ் துணை சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
    • அதிரடியாக உள்ளே சென்று கைதி அறைகள் மற்றும் கைதிகளை தீவிர சோதனை செய்து வருகின்றனர். இந்த திடீர் சோதனை காலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது.

    கடலூர்:

    கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் என 700-க்கும் மேற்பட்டோர் இருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மத்திய சிறைச்சாலையில் அவ்வப்போது கைதிகளிடம் இருந்து செல்போன், சிம்கார்டு, பிளேடு, கஞ்சா, பீடி, சிகரெட் ஆகிய பொருட்களை சோதனை செய்து சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடலூர் மத்திய சிறையில் போலீஸ் துணை சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிரடியாக உள்ளே சென்று கைதி அறைகள் மற்றும் கைதிகளை தீவிர சோதனை செய்து வருகின்றனர். இந்த திடீர் சோதனை காலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது.

    மேலும் இந்த சோதனையில் கைதிகளிடம் இருந்து தடைசெய்யப்பட்ட செல்போன், கஞ்சா, பான்மசாலா மற்றும் ஆயுதங்கள் கிடைக்கின்றதா? என்பது சோதனை முடிவில் தெரிய வரும். இதுமட்டுமன்றி கைதிகளுக்கு ஏதேனும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதா? என்பதனையும் சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது மத்திய சிறைச்சாலை சூப்பிரண்டு செந்தில் குமார், சிறை அலுவலர்கள் உடன் இருந்தனர். இந்த சம்பவத்தால் கடலூர் மத்திய சிறைச்சாலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×