என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கடலூர் மத்திய சிறையில் செல்போன், பேட்டரி, சிம் கார்டு பறிமுதல்
- மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் 2 பேட்டரிகள், சிம் கார்டு பறிமுதல் செய்ததுடன், கடலூர் முதுநகர் போலீசில் புகார் கொடுத்தனர்.
- சிறைசாலை வளாகத்தில் செல்போன் மற்றும் பேட்டரி , சிம் கார்டு ஆகியவற்றை புதைத்து வைத்தது பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் என்பது தெரியவந்து.
கடலூர்:
கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையிலான சிறை காவலர்கள் மத்திய சிறை வளாகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வெளிச் சிறை எண் 1 பகுதி வளாக கழிவறை முன்பு உள்ள செடி அருகில் மண்ணை தோண்டி பார்த்ததற்கான அறிகுறி தெரிந்தது. இதனால் சந்தேகமடைந்த சிறை காவலர்கள் மண்ணை தோண்டி பார்த்தபோது, அங்கு 1 செல்போன் மற்றும் 2 பேட்டரிகள், சிம் கார்டு ஆகியவற்றை புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறை காவலர்கள் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் 2 பேட்டரிகள், சிம் கார்டு பறிமுதல் செய்ததுடன், கடலூர் முதுநகர் போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சிறைசாலை வளாகத்தில் செல்போன் மற்றும் பேட்டரி , சிம் கார்டு ஆகியவற்றை புதைத்து வைத்தது பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் என்பது தெரியவந்து. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜெயிலர் மணிகண்டனுக்கும், பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரனுக்கும் முன் விரோதம் இருந்து வந்த நிலையில் சிறைசாலையில் பணிபுரிந்து வந்த வார்டன் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் ஜெயிலர் கடந்த ஆண்டு மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் ஊற்றி அவரது குடும்பத்தினரை கொலை செய்ய முயற்சித்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு தூண்டுகோலாக பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்