search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    திருப்பூரில் பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

    திருப்பூரில் பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த நேரு வீதியை சேர்ந்தவர் துரைசாமி.

    இவரது மனைவி விமலாமணி (வயது 59). இவர் அந்த பகுதியில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேரில் பின்னால் உட்கார்ந்திருந்த நபர் திடீரென விமலாமணியின் நபர்கள் 2 பேரும் 3 பவுன் சங்கிலியுடன் கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அவர்கள் இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.

    இதுகுறித்து விமலாமணி 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    Next Story
    ×