search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தர்மபுரி மாவட்டத்தில் மதுவிற்ற 16 பேர் கைது

    தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு புறம்பாக மது விற்ற 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தர்மபுரி

    தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின்பேரில், தருமபுரி மாவட்ட போலீசார் கள்ளத்தனமாக மதுவிற்பவர்கள் குறித்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது அரசுக்கு புறம்பாக மதுபாட்டிலை வீட்டில் பதுக்கி வைத்து கள்ளத்தனமாக மது விற்றவர்களை போலீசார் கைது செய்தனர். தருமபுரியில் 4 பேரும், அரூரில் 2 பேரும், பென்னாகரத்தில் 9 பேரும் மற்றும் பாலக்கோட்டில்  ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

    தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 150-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×