என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வில்லிவாக்கம் மார்க்கெட்டில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை மாற்றிய முதியவர்
வில்லிவாக்கம்:
வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தையொட்டி மார்க்கெட் உள்ளது. இங்கு எப்போதும் வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மார்க்கெட் பகுதிக்கு வந்தார். அவர் அங்குள்ள தேங்காய் கடையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை கொடுத்து தேங்காய் வாங்கிவிட்டு மீதியை வாங்கிச் சென்றார். இதே போல் அங்குள்ள முட்டை கடையிலும் கள்ள நோட்டை மாற்றினார்.
மேலும் அங்குள்ள மற்ற கடைகளில் முதியவர் கொடுத்த ரூ.2 ஆயிரம் நோட்டில் சந்தேகம் இருந்ததால் சில வியாபாரிகள் அதனை வாங்கவில்லை. தொடர்ந்து 3 நாட்களாக அந்த முதியவர் கள்ள நோட்டுகளை மார்க்கெட்டில் மாற்றி உள்ளார்.
நேற்று மீண்டும் அதே முதியவர் இளம்பெண்ணு டன் மார்க்கெட்டுக்கு வந்து தேங்காய் கடையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை மாற்றி சென்றார். சிறிது நேரத்துக்கு பின்னரே அந்த முதியவர் தொடர்ந்து கள்ள நோட்டுகளை மாற்றி சென்றது மற்ற வியாபாரிகளுக்கு தெரிந்தது.
இது குறித்து வில்லிவாக்கம் போலீசில் தேங்காய்கடை உரிமையாளர் கிட்டு புகார் செய்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முதியவர் உருவம் பதிவாகி இருந்தது.
அதனை வைத்து கள்ள நோட்டுகளை மாற்றி முதியவர் மற்றும் அவருடன் வந்த இளம்பெண் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்