என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெட்டப்பாக்கம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை
Byமாலை மலர்21 Oct 2019 2:02 PM GMT (Updated: 21 Oct 2019 2:02 PM GMT)
நெட்டப்பாக்கம் அருகே கணவனுடன் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேதராப்பட்டு:
நெட்டப்பாக்கம் அருகே மடுகரை டி.ஆர். நகரை சேர்ந்தவர் ரமேஷ். தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (வயது35). இவர்களுக்கு லோகநாதன் என்ற மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
சங்கீதா கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். ஆனால் சங்கீதா வேலைக்கு செல்வது ரமேஷ் விரும்பவில்லை. இதையடுத்து சங்கீதாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என ரமேஷ் கூறிவந்தார். ஆனாலும் சங்கீதா தொடர்ந்து வேலைக்கு சென்று வந்தார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக் கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் சம்பவத்தன்றும் இதுதொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது விரக்கி அடைந்த சங்கீதா வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார்.
இதையடுத்து அக்கம் பக்த்தினர் தீயை அணைத்து சங்கீதாவை புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சங்கீதா பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து சங்கீதாவின் மகன் லோகநாதன் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விமலகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X