search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றுநீரை ஏரி, குளங்களில் நிரப்ப நடவடிக்கை- பாமக கூட்டத்தில் தீர்மானம்

    ஒகேனக்கல் காவிரி ஆற்றுநீரை ஏரி, குளங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் தருமபுரியில் மாநில துணைப் பொதுச்செயலாளர்  வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் அரசாங்கம், பெரியசாமி ஆகியோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். 

    இக்கூட்டத்தில், மாநில இணைப் பொது செயலாளர் இசக்கி படையாட்சி, மாநில அமைப்பு செயலாளர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினர். கூட்டத்தில், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மழைக்காலங்களில் காவிரியில் கரைபுரண்டு சென்று கடலில் கலக்கும் உபரிநீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நிரப்பும் திட்டத்திற்கு தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×