search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கத்திக்குத்து
    X
    கத்திக்குத்து

    மெஞ்ஞானபுரம் அருகே இரும்பு கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து

    மெஞ்ஞானபுரம் அருகே சொத்து தகராறில் இரும்பு கடை உரிமையாளரை கத்தியால் குத்திய கட்டிட தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் விஜயலிங்க துரை. இவர் கோவையில் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

    இவருக்கும், கடாச்சபுரத்தை சேர்ந்த விஜயலிங்க துரை தங்கையின் கணவர் கட்டிடத்தொழிலாளியான அசோக்குக்கும் (30) சொத்துப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே அசோக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயலிங்க துரையை குத்தினார்.

    அதில் காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்கை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×