என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல்லில் ரெயில் பயணியிடம் பணப்பை திருட்டு
Byமாலை மலர்17 Oct 2019 11:36 AM GMT (Updated: 17 Oct 2019 11:36 AM GMT)
திண்டுக்கல்லில் ரெயில் பயணியிடம் பணப்பையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியைச் சேர்ந்த கண்ணன் மகன் பிரவீன்குமார் (வயது 23). இவர் பொள்ளாச்சியில் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்து கொண்டு இருந்தார். திண்டுக்கல் அனுமந்தன்நகர் அருகே வந்த போது அவர் வைத்திருந்த பையை ஒரு வாலிபர் எடுத்துக் கொண்டு ஓடி விட்டார்.
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் கண் விழித்து பார்த்த போது தனது பையை காணாமல் பிரவீன் குமார் திடுக்கிட்டார். அதில் ரூ.1500 பணம், கம்பெனி ஐ.டி. கார்டு மற்றும் சில ஆவணங்கள் வைத்திருந்தார்.
அருகில் இருந்த பயணிகள் ஒரு வாலிபர் பணப்பையை திருடிச் சென்றதை தெரிவித்தனர். இது குறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசில் பிரவீன்குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X