search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் பயணி"

    • எர்ணாகுளம் ரெயில் நிலையத்தை கடந்து சென்ற பின்னர், கார்த்திக்கை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.
    • யணியை கடித்தது பாம்பா அல்லது எலியா என்ற சந்தேகம் உள்ளது என்று ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

    பெரும்பாவூர்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் இருந்து நேற்று காலை 9.30 மணியளவில் விரைவு ரெயில் (ரெயில் எண்.16329) மதுரை நோக்கி புறப்பட்டது. 6-வது பெட்டியில் மதுரை சின்ன கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த கார்த்திக்(வயது 23) என்பவர் பயணம் செய்தார். தொடர்ந்து எர்ணாகுளம் ரெயில் நிலையத்தை கடந்து சென்ற பின்னர், கார்த்திக்கை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் வலி தாங்க முடியாமல் துடித்தார். பின்னர் கோட்டயம் மாவட்டம் ஏட்டுமானூர் ரெயில் நிலையத்துக்கு ரெயில் வந்தது. உடனே கார்த்திக் மீட்கப்பட்டு அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சு மூலம் கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பயணியை கடித்தது பாம்பா அல்லது எலியா என்ற சந்தேகம் உள்ளது என்று ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து அந்த ரெயில் பெட்டியில் இருந்த அனைத்து பயணிகளும் கீழே இறக்கப்பட்டு, ரெயில்வே ஊழியர்கள், போலீசார் சோதனை நடத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    • மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் பணம் கேட்டு திருநங்கைகள் அதிகஅளவு தொந்தரவு செய்வதாக ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன.
    • ரெயில் பயணிகளிடம் அத்துமீறும் திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் பணம் கேட்டு திருநங்கைகள் அதிகஅளவு தொந்தரவு செய்வதாக ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து பரங்கிமலை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் திருநங்கைகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது ரெயில் பயணிகளிடம் அத்துமீறும் திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.இதில் 40-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். படித்த மற்றும் தொழில் திறன் உள்ள திருநங்கைகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமாக வேலை கிடைக்க ரெயில்வே போலீசார் ஏற்பாடு செய்து உள்ளனர்.

    ரெயில்வே காவல்துறையின் பாதுகாப்பு விழிப்புணர்வு நோட்டீசுகளை பயணிகளுக்கு வழங்கினார்கள்.
    கோவை:

    ரெயில் பயணிகளின் பாதுகாப்புக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘ஜி.ஆர்.பி. ஹெல்ப் செயலி’யை கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கோவையில் அறிமுகம் செய்தார். இந்த செயலியை ஆன்ட்ராய்டு செல்போனில் பதிவு செய்து, ரெயில் பயணிகளுக்கு பிரச்சினை மற்றும் ஆபத்து ஏற்படும்போது ரெயில்வே போலீசை தொடர்பு கொள்ள முடியும். இந்த செயலி தொடர்பான தகவல்களை என்.சி.சி. மாணவர்கள் கோவை ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் ரெயில்வே காவல்துறையின் பாதுகாப்பு விழிப்புணர்வு நோட்டீசுகளையும் வழங்கினார்கள்.

    அந்த நோட்டீசில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பெண்களுக்கான ரெயில் பெட்டியில் சந்தேக நபர்களோ, ஆண்களோ இருந்தால் ரெயில்வே கட்டுப்பாட்டு அறை எண் 1512, மற்றும் 99625 00500 என்ற செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கலாம். ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து இருக்கும் பெண்கள், ஜன்னல் பக்கம் தலைவைத்து தூங்கும் பெண் பயணிகள் தங்களின் நகைகளை வெளியே தெரியாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் பயணம் செய்வோர் ரெயில் பெட்டியின் கதவுகளை மூடி பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும். கழிவறை கதவுகள் நீண்டநேரமாக உட்புறமாக மூடப்பட்டு இருந்தால் போலீசுக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கலாம். அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் குளிர்பானத்தையோ, தின்பண்டங்களையோ வாங்கி சாப்பிடக் கூடாது. பயணிகள் தங்களின் உடைமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×