search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணப்பை திருட்டு"

    • பஸ்சில் ஏற முயன்றபோது துணிகரம்
    • பஸ்சில் ஏற முயன்றபோது துணிகரம்

    ஆரணி:

    ஆரணி அருகே முக்குருந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 35). இவர் சொந்த வேலைக்காக ஆரணிக்கு சென்றார்.

    பின்னர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து முக்குருந்தை கிராமத்திற்கு செல்ல முடிவு செய்தார். அப்போது அங்கு வந்த பஸ்சில் கூட்ட நெரிசலில் ஏற முயன்றார்.

    அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாேரா மர்ம நபர் ஒருவர் அவரது பணப்பையை திருடி சென்றார்.

    இது குறித்து விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×