search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திருப்பூரில் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை கொன்ற தாய்

    திருப்பூரில் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை தாய் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பூர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 45). பனியன் தொழிலாளி. இவர் திருப்பூர் கே.வி.ஆர். நகரை அடுத்த ஜீவா நகரில் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக லட்சுமி மகன்களை அழைத்துக்கொண்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.

    இந்நிலையில் பாண்டியன் அவரது தாய் முருகாயி (60) என்பவருடன் வசித்து வந்தார். முருகாயி அப்பகுதியில் உள்ள கிளப்பில் துப்புரவு வேலை செய்து வருகிறார். பாண்டியனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் கடந்த 3 மாதமாக பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு செல்லாமல் இருந்தார்.

    நேற்று முன்தினம் மதியம் பாண்டியனுக்கும், முருகாயியிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் பாண்டியன், வீட்டுக்குள் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்ததும் திருப்பூர் மத்திய போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் பாண்டியனின் தாயார் முருகாயியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தனது மகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    தொடர்ந்து போலீசார் முருகாயிடம் விசாரணை செய்த போது அவர் வாக்குமூலமாக கூறியதாவது:-

    நான் கிளப்பில் துப்புரவு வேலை செய்து சாப்பிட்டு வருகிறேன். எனது மகன் பாண்டியனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து சென்று விட்டனர். என்னுடன் வசித்து வந்த பாண்டியன் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். கடந்த 3 மாதமாக வேலைக்கு செல்வதில்லை. இதனால் குடிக்க பணம் கேட்டு என்னிடம் அடிக்கடி தொந்தரவு செய்வார். இது தவிர கிளப்பில் இருந்து மது எடுத்து வருமாறு தொல்லை செய்தார். சம்பவத்தன்று இரவு பாண்டியன் மது குடிக்க என்னிடம் பணம் கேட்டார். நான் பணம் தரமறுத்தேன். ஆனால் என்னிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றார். இதனால் மகனை தள்ளிவிட்டேன். அவர் கீழே விழுந்தார். ஆத்திரமடைந்த நான் அருகில் கிடந்த கத்தியை எடுத்து மகனை குத்திக்கொலை செய்தேன். இவ்வாறு அவர் கூறினார். இதனையடுத்து போலீசார் முருகாயியை கைது செய்தனர்.
    Next Story
    ×