search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகன் கொலை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுசனா சேத் அறையை காலி செய்தபோது அவருடன் வந்த மகன் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
    • சுசனா சேத் பெங்களூரு செல்வதற்காக வாடகை கார் வேண்டும் என ஓட்டல் வரவேற்பாளர்களிடம் கேட்டுள்ளார்.

    பனாஜி:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த உயர் தொழில்நுட்ப நிறுவனரும், மைண்ட்புல் ஏஐ லேப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும் சுசனா சேத் (வயது39) என்ற பெண்மணி உள்ளார்.

    இவர் கடந்த 6-ந்தேதி வடக்கு கோவாவில் உள்ள பிரபலமான அபார்ட்மெண்ட் ஓட்டல் ஒன்றில் தனது 4 வயது மகனுடன் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று அதிகாலை ஓட்டல் அறையை காலி செய்து விட்டு அவர் காரில் பெங்களூரு திரும்பினார்.

    இந்நிலையில் அவர் தங்கி இருந்த ஓட்டல் அறையை பராமரிப்பு ஊழியர் சுத்தம் செய்தபோது அங்கு ரத்தக்கறைகள் படிந்திருந்ததும், கறைகள் படிந்த துணிகளை பார்த்தும் அதிர்ச்சியடைந்து ஓட்டல் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    சந்தேகம் அடைந்த அவர்கள் சுசனா சேத் அறையை காலி செய்தபோது அவருடன் வந்த மகன் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதனால் ஓட்டல் நிர்வாகத்தினருக்கு சந்தேகம் வலுத்தது. அவர்கள் போலீஸ் நிலையத்தில் விவரங்களை தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று ஓட்டல் அறையில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தினர். அப்போது சுசனா சேத் தனது மகனுடன் ஓட்டலுக்கு வந்த நிலையில் திரும்பி செல்லும்போது மகனை அழைத்து செல்லவில்லை என்பது உறுதியானது. அதே நேரம் ஓட்டல் பணியாளர்களிடம் விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

    சுசனா சேத் பெங்களூரு செல்வதற்காக வாடகை கார் வேண்டும் என ஓட்டல் வரவேற்பாளர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு வரவேற்பாளர் இங்கிருந்து விமான டிக்கெட் கட்டணம் மிகவும் குறைவுதான். எனவே அதில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அறிவுறுத்திய நிலையிலும் சுசனா சேத், டாக்சியில் தான் பயணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.

    அதன்படி வந்த டாக்சியில் சுசனா சேத் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் கையில் ஒரு பேக்கை சுமக்க முடியாமல் எடுத்து சென்ற காட்சிகளையும் பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பெரிய நிறுவனத்தின் அதிகாரியாக திகழும் சுசனா சேத் யாருடைய உதவியையும் கேட்காமல் பெரிய பேக்கை எடுத்து சென்றது ஏன்? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அவருடன் வந்த மகன் எங்கே என்ற கேள்விக்கும் விடை தெரியாததால் போலீசார் திகைத்தனர்.

    இவ்வாறாக அடுத்தடுத்து சந்தேகங்கள் வலுத்ததால் போலீசார் சுசனா சேத் செல்போனில் தொடர்பு கொண்டு உங்களது மகன் எங்கே? என விசாரித்தனர். அப்போது சுசனா சேத்தை தனது மகனை நண்பர் வீட்டில் விட்டு சென்றுள்ளதாக கூறினார்.

    ஆனால் அவர் கூறிய முகவரியை போலீசார் சரிபார்த்தபோது அது போலி முகவரி என தெரிய வந்தது. இதனால் ஏதோ விபரீதம் நிகழ்ந்துள்ளது என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவர் பயணித்த டாக்சி டிரைவரை தொடர்பு கொண்டு பேசியபோது, கார் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் சென்று கொண்டிருப்பதும், காரில் சுசனா சேத்தின் மகன் இல்லை என்பதும் உறுதியானது.

    இதைத்தொடர்ந்து கார் டிரைவரை அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு காரை கொண்டு செல்லுமாறு போலீசார் கூறினர். அதன்படி டிரைவர், ஜமங்கலா போலீஸ் நிலையத்திற்கு காரை ஓட்டி சென்றார். அங்கு கோவா போலீசார் கூறியபடி, காரை போலீஸ் அதிகாரிகள் சோதனை செய்தபோது காரில் இருந்த பையில் சுசனா சேத்தின் மகன் பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து போலீசார் சுசனா சேத்தை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது மகனை கொன்றுவிட்டு உடலை பையில் அடைத்து காரில் எடுத்து சென்றது தெரியவந்தது. ஆனால் கொலைக்கான காரணங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை.

    இது தொடர்பாக போலீசார் சுசனா சேத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சில மாதங்களுக்கு முன்பு சந்தனக் கருப்புவுக்கும், மனைவி சுமித்ராவும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
    • ஆத்திரமடைந்த மகாலிங்கம், அங்கு கிடந்த விறகு கட்டையை எடுத்து மகனின் தலையில் பலமாக அடித்தார்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சின்ன உலகாணி பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருடைய மனைவி பேச்சியம்மாள். இவர்களுடைய மகன் சந்தன கருப்பு(வயது 23)

    கடந்த 2 ஆண்டுகளுக்கு சந்தன கருப்பு, தனது தந்தையின் சகோதரி மகள் சுமித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    சில மாதங்களுக்கு முன்பு சந்தனக் கருப்புவுக்கும், மனைவி சுமித்ராவும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கணவரை பிரிந்து சுமித்ரா தாய் வீடான சாத்தங்குடிக்கு குழந்தையுடன் சென்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று சந்தன கருப்பு தனது மகனை பார்க்க சாத்தங்குடிக்கு சென்றார். அப்போது அவரது மனைவி சுமித்ரா, மாமியார் மாரியம்மாள் ஆகியோர் தகராறு செய்து உள்ளனர். மேலும் சந்தன கருப்பு கண்களில் மிளகாய் பொடியை தூவி அவரை அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தினர்.

    அப்போது அங்கு வந்த அவரது தந்தை மகாலிங்கம் சமாதானம் செய்து மகனை அழைத்து செல்ல முயன்றார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகாலிங்கம், அங்கு கிடந்த விறகு கட்டையை எடுத்து மகனின் தலையில் பலமாக அடித்தார். இதில் நிலை குலைந்து விழுந்த சந்தன கருப்பு ரத்த வெள்ளத்தில் மயங்கினார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறிந்து சந்தனகருப்புவின் தாய் பேச்சியம்மாள் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி சுமித்ரா, மாமியார் மாரியம்மாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மகாலிங்கத்தை தேடி வருகின்றனர்.

    • குடித்து விட்டு ஊர் சுற்றி வந்த மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
    • கொலை குறித்து திட்டக்குடி டி. எஸ். பி. காவியா விசாரணை நடத்தி வருகிறார்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் ஆவினங்குடி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொடிக்களம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (60). இவரது மகன் விநாயகம் (28). இவர் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆறுமுகத்துக்கும் விநாயகத்திற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு குடித்துவிட்டு வீடு திரும்பிய விநாயகத்துடன் சண்டை ஏற்பட்டு மோதலாக மாறியது.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் தனது மகன் விநாயகம் நெஞ்சில் கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த விநாயகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடம் விநாயகம் மாரடைப்பால் இறந்ததாக கூறி உடலை அடக்கம் செய்ய தயார் செய்து கொண்டிருந்த நிலையில் ஆவினங்குடி போலீசுக்கு கிடைத்த தகவலின் பேரில் விநாயகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மகனை கொலை செய்து நாடகமாடிய ஆறுமுகத்தை கைது செய்தனர். இதுகுறித்து திட்டக்குடி டி. எஸ். பி. காவியா விசாரணை நடத்தி வருகிறார்.

    • சிகிச்சையில் இருந்த ராகுல்ராஜ் மற்றும் நம்பெருமாள் ராஜ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
    • ஆனந்தகுமார் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அணைக்கரைக்கப்பட்டி காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் நம்பெருமாள் ராஜ் (வயது 49). இவரது மனைவி நிர்மலா தேவி (45). இவர்களது மகன் ராகுல்ராஜ் (15). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இவரை தாய் நிர்மலா தேவி கவனித்து வந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நோய்வாய்பட்டு இறந்து விட்டார்.

    அப்போது முதல் நம்பெருமாள் ராஜ் தனது மகனை கவனித்து வந்துள்ளார். மேலும் மனைவி இறந்ததால் மகனை சரிவர கவனிக்க முடியாமல் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். தான் இறந்து விட்டால் தனது மகனை யாரும் கவனிக்க மாட்டார்கள் என நினைத்து அவருக்கு விஷம் கொடுத்து தானும் அதே விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.

    அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சையில் இருந்த ராகுல்ராஜ் மற்றும் நம்பெருமாள் ராஜ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

    இது குறித்து அவரது உறவினர் ஆனந்தகுமார் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது குடிக்க பணம் கேட்டு அடித்து துன்புறுத்திய மகனை பெற்றோரே கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • ராம் சிங் அவரது மனைவி ராணி பாய் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை ஜெயிலில் அடைத்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள கம்மத் கிராமத்தை சேர்ந்தவர் ராம் சிங். மரி பெடா பங்களா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவருடைய மனைவி ராணி பாய். மகள் அமெரிக்காவில் குடியேறி உள்ளார். இவர்களது மகன் சாய்ராம் (வயது 26). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து மது குடித்து வந்தார். அவரது பெற்றோரிடம் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டார்.

    அவர்கள் தர மறுத்த போது தாய் தந்தை என்று கூட பார்க்காமல் தினந்தோறும் அடித்து துன்புறுத்தினார்.

    மகனை எப்படியாவது திருத்தி நல்வாழ்வுக்கு கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய ராம் சிங், சாய்ராமை ஐதராபாத்தில் உள்ள ஒரு மன நல சிகிச்சை மையத்தில் சேர்த்தார். ஆனால் சாய்ராம் அங்கு சிகிச்சை பெறாமல் வீடு திரும்பினார்.

    அங்கிருந்து வந்த பிறகு சாய்ராமின் கோர தாண்டவம் அதிகரித்தது. இரவு நேரங்களில் மது குடிக்க பணம் கேட்டு தாய் தந்தையை தொடர்ந்து தாக்கினார். இதனால் மனமுடைந்து போன ராம் சிங்கும் அவரது மனைவியும் மகன் என்று கூட பார்க்காமல் அவனை தீர்த்து கட்ட முடிவு செய்தனர்.

    இதுகுறித்து ராணி பாய் அவரது சகோதரர் சத்ய நாராயணா என்பவரிடம் கூறினார்.

    அவர் கூலிப்படையை சேர்ந்த ரவி, தர்மா, நாகராஜ், ராம்பாபு ஆகியோரிடம் சாய்ராமை கொலை செய்ய பேரம் பேசினார். அவர்கள் ரூ.8 லட்சம் பணம் கேட்டனர்.

    அவர்களிடம் ராம் சிங் முன்பணமாக ரூ.1.5 லட்சம் கொடுத்தார். கொலை நடந்த பிறகு ரூ.6.5 லட்சத்தை தருவதாக ஒப்புக்கொண்டனர்.

    கடந்த 18-ந் தேதி சத்யநாராயணா கூலிப்படையுடன் வந்தார். சாய்ராமை மது குடிக்க அழைத்தார். மாமா தான் கூப்பிடுகிறார் என்று சாய்ராம் அவருடன் சென்றார்.

    ராம் சிங்கின் காரில் கூலிப்படையினர் சாய்ராமை அழைத்துச் சென்றனர். கல்லேபள்ளி என்ற இடத்தில் வைத்து மது குடித்தனர்.

    போதையில் சரிந்த சாய்ராமை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். அங்குள்ள வனப்பகுதியில் அவரது உடலை வீசிவிட்டு திரும்பி வந்து விட்டனர். சாய்ராமை கொலை செய்து வீசியது குறித்து சத்யநாராயணா அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் சாய்ராம் பிணமாக கிடந்ததை கண்ட பொதுமக்கள் கம்மத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சாய்ராமை 5 பேர் கும்பல் காரில் அழைத்து வந்தது பதிவாகி இருந்தது.

    அதில் உள்ள கார் மூலம் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    இதற்கிடையே ராம் சிங் தனது மகனை காணவில்லை என போலீசாரிடம் புகார் அளித்தார். ஆஸ்பத்திரியில் இருந்த சாய்ராம் உடலை அடையாளம் காண்பதற்காக ராம் சிங் மற்றும் ராணி பாயை அழைத்தனர்.

    அவர்கள் காரில் வந்து ஆஸ்பத்திரியில் இருந்த உடலை பார்வையிட்டனர்.

    அவர்கள் வந்த காரை பார்த்ததும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. கண்காணிப்பு கேமராவில் பதிவான அதே கார் இங்கே வந்திருப்பதை அறிந்த போலீசார் ராம் சிங் மற்றும் ராணிபாயிடம் விசாரணை நடத்தினர். இதில் மது குடிக்க பணம் கொடுக்காததால் அடித்துக் கொடுமை செய்த மகனை கூலிப்படை மூலம் கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து ராம் சிங் அவரது மனைவி ராணி பாய் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை ஜெயிலில் அடைத்தனர். கூலிப்படையை சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மது குடிக்க பணம் கேட்டு அடித்து துன்புறுத்திய மகனை பெற்றோரே கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தீபாவளி பண்டிகை நாளில் மது குடித்துவிட்டு தகராறு செய்த மகனை தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அவனியாபுரம் போலீசார், மகனை கத்தியால் குத்திக்கொன்ற செல்வராஜை கைது செய்தனர்.

    அவனியாபுரம்:

    மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62). இரும்பு வியாபாரி. இவர் தனது மகன் கங்காதரன் (34), மருமகள், குழந்தைகள் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் தீபாவளி தினமான நேற்று காலை முதலே கங்காதரன் பலமுறை மதுபானக்கடைக்கு சென்று மது குடித்து வந்துள்ளார். மது போதையில் வீட்டிற்கு வந்த கங்காதரன் தந்தையிடம் தொடர்ந்து மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். போதை அதிகரித்ததும் தந்தை, மனைவி ஆகியோரை அவதூறாக பேசி தகராறு செய்துள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கங்காதரன் நெஞ்சில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கங்காதரனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அவனியாபுரம் போலீசார், மகனை கத்தியால் குத்திக்கொன்ற செல்வராஜை கைது செய்தனர்.

    தீபாவளி பண்டிகை நாளில் மது குடித்துவிட்டு தகராறு செய்த மகனை தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×