search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமங்கலம் அருகே குழந்தையை பார்க்க சென்ற வாலிபரை அடித்துக்கொன்ற தந்தை
    X

    திருமங்கலம் அருகே குழந்தையை பார்க்க சென்ற வாலிபரை அடித்துக்கொன்ற தந்தை

    • சில மாதங்களுக்கு முன்பு சந்தனக் கருப்புவுக்கும், மனைவி சுமித்ராவும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
    • ஆத்திரமடைந்த மகாலிங்கம், அங்கு கிடந்த விறகு கட்டையை எடுத்து மகனின் தலையில் பலமாக அடித்தார்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சின்ன உலகாணி பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருடைய மனைவி பேச்சியம்மாள். இவர்களுடைய மகன் சந்தன கருப்பு(வயது 23)

    கடந்த 2 ஆண்டுகளுக்கு சந்தன கருப்பு, தனது தந்தையின் சகோதரி மகள் சுமித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    சில மாதங்களுக்கு முன்பு சந்தனக் கருப்புவுக்கும், மனைவி சுமித்ராவும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கணவரை பிரிந்து சுமித்ரா தாய் வீடான சாத்தங்குடிக்கு குழந்தையுடன் சென்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று சந்தன கருப்பு தனது மகனை பார்க்க சாத்தங்குடிக்கு சென்றார். அப்போது அவரது மனைவி சுமித்ரா, மாமியார் மாரியம்மாள் ஆகியோர் தகராறு செய்து உள்ளனர். மேலும் சந்தன கருப்பு கண்களில் மிளகாய் பொடியை தூவி அவரை அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தினர்.

    அப்போது அங்கு வந்த அவரது தந்தை மகாலிங்கம் சமாதானம் செய்து மகனை அழைத்து செல்ல முயன்றார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகாலிங்கம், அங்கு கிடந்த விறகு கட்டையை எடுத்து மகனின் தலையில் பலமாக அடித்தார். இதில் நிலை குலைந்து விழுந்த சந்தன கருப்பு ரத்த வெள்ளத்தில் மயங்கினார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறிந்து சந்தனகருப்புவின் தாய் பேச்சியம்மாள் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி சுமித்ரா, மாமியார் மாரியம்மாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மகாலிங்கத்தை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×