என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேனி அருகே குடும்ப பிரச்சினையில் 2 பேர் தற்கொலை
தேனி:
தேனி மாவட்டம் கூடலூர் குள்ளப்பகவுண்டர் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கும் பிரவீனா (வயது26). என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது. ராஜேஷ் வேன் டிரைவராக உள்ளார். வீட்டு செலவுக்கு சரிவர பணம் தராததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் பிரவீனா தனது கணவரை கடுமையாக தாக்கினார். காயம் அடைந்த ராஜேஷ் கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் பிரவீனா தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கூடலூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
போடி ஜமீன் மேனேஜர் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (62). சமையல் வேலை பார்த்து வந்தார். கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்தார்.
சம்பவத்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி கிருஷ்ணவேணி கொடுத்த புகாரின் பேரில் போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்