search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வீராம்பட்டினத்தில் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை

    வீராம்பட்டினத்தில் நோய் கொடுமையால் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பாகூர்:

    வீராம்பட்டினம் பவானி நகரை சேர்ந்தவர் ராமஜெயம். (வயது 81). இவர் கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமா நோயால் அவதி அடைந்து வந்தார். இதனால் மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் முற்றிலுமாக குணமாகவில்லை. 

    இதனால் தற்கொலை செய்து கொள்ள ராமஜெயம் முடிவு செய்தார். நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்று ராமஜெயம் அப்பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் வேட்டியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து அவரது மகன் முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×