search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்குதல்
    X
    மின்சாரம் தாக்குதல்

    கோயம்பேட்டில் கழிவுநீர் வாரியத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

    சென்னை கோயம்பேட்டில் கழிவுநீர் வாரியத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    போரூர்:

    பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் விபுன்குமார் (வயது 20) கட்டிட தொழிலாளி.

    இவர் சென்னை கோயம்பேடு காளியம்மன் கோவில் தெருவில் உள்ள குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய அலுவலக வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை பழுதடைந்த மின்சார வயர்களை விபுன்குமார் சரி பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சாலிகிராமத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விபுன் குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×