என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விதிகளை மீறி பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறை - சென்னை மாநகராட்சி நோட்டீசுக்கு ஐகோர்ட் தடை
Byமாலை மலர்25 Sep 2019 1:01 PM GMT (Updated: 25 Sep 2019 1:01 PM GMT)
சென்னையில் விதிமுறைகளை மீறி பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற மாநகராட்சியின் அறிவிப்புக்கு ஐகோர்ட் இன்று தடை விதித்துள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சி முழுவதும் முக்கிய சாலைகள், பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, விதிமுறைகளை மீறி பேனர் அச்சடிப்பவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி பேனர்கள் அச்சடிக்க வேண்டும்.
அனுமதியின்றி பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அச்சடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரித்த ஐகோர்ட், அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறை என அச்சகங்களுக்கு மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி அக்டோபர் 23-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X