என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவையில் ஆட்டோ டிரைவர் குளத்தில் குதித்து தற்கொலை
கோவை:
கோவை இடையர் பாளையம் ரங்கம்மாள் வீதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 65). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி லலிதா (55). இவர்களது மகன் ஹரிபிரசாத் (29). இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்தனர்.
இந்நிலையில் விரக்தியடைந்த தங்கராஜ் முத்தண்ணன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். வழக்கம்போல் தந்தையை பார்க்க ஹரி பிரசாத் அவர் தங்கியிருந்த இடத்துக்கு சென்றார். அங்கு அவர் இல்லை. தந்தையை பல இடங்களில் தேடிப்பார்த்தார்.
அப்போது முத்தண்ணன் குளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்குசென்று பார்த்தபோது இறந்து கிடப்பது தனது தந்தை தான் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். அருகில் அவரது ஆட்டோ நின்றது. எனவே அவர் ஆட்டோவில் வந்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்