search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ரெட்டியார்பாளையத்தில் காவலாளி தூக்குபோட்டு தற்கொலை

    ரெட்டியார்பாளையத்தில் மனைவி கண்டித்ததால் காவலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    ரெட்டியார்பாளையம் ஜெ.ஜெ. நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சேது (வயது48). இவர் தனியார் நிறுவனத்தில்  காவலாளியாக  வேலைபார்த்து வந்தார். இவருக்கு பெரியநாயகி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.  
    சேதுவுக்கு மதுகுடிக்கும்  பழக்கம் இருந்து வந்தது. இதனால் இவர் அடிக்கடி வேலைக்கு செல்லாமல்  இருந்து வந்தார். இதனை அவரது மனைவி அவ்வப்போது கண்டிக்கும் போது தற்கொலை செய்து கொள்வேன் என சேது மிரட்டி வந்தார். மேலும் 2 முறை தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார். அப்போது சேதுவை அவர்களது குடும்பத்தினர் மீட்டு உயிரை காப்பாற்றினர். 

    இந்த நிலையில் சம்பவத்தன்று சேது மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது சேதுவை அவரது மனைவி பெரியநாயகி  கண்டித்தார். இதனால் மனமுடைந்த சேது தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் மனைவி முன் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். உடனடியாக சேதுவை அவரது குடும்பத்தினர் மீட்டு கதிர்காமம்  அரசு மருத்துவ கல்லூரி  ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சேது நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.   
    Next Story
    ×