search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவலாளி தற்கொலை"

    • வேல்முருகன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
    • குடிபோதையில் பிளேடால் அறுத்து கொண்டது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி தாண்டாம்பா ளையம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (52). அப்பகுதியில் உள்ள ஸ்பின்னிங் மில் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி விஜயா (42). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். வேல்முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மனைவி விஜயாவும், மகனும் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வேல்முருகன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

    மேலும் அவர் குடிபோதையில் கைகள் இரண்டையும் பிளேடால் அறுத்து கொண்டது தெரிய வந்தது.குடிபோதையில் வேல்முருகன் இதுபோல அடிக்கடி ஏதாவது செய்து கொள்வது வழக்கமாம்.

    இதையடுத்து உடனடியாக அவரை மீட்டு சிவகிரி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே வேல்மு ருகன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    • தொழிலதிபர வேனில் வந்த 2 பேர் அவரை தாக்கி கண்களைக் கட்டி கடத்திச் சென்றனர்.
    • உடந்தையாக இருந்த காவலாளி தற்கொலை செய்ததால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி பகுதியை சேர்ந்தவர் அதிசயம் (வயது 70). மொத்த பிராய்லர் கோழிக்கறி வியாபாரம், முட்டை உள்ளிட்ட தொழில்கள் செய்து வருகிறார். சொந்த விவசாய தோட்டங்களும் உள்ளது.

    நேற்றுகாலை ஆணைமலையன்பட்டி தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வேனில் வந்த 2 பேர் அவரை தாக்கி கண்களைக் கட்டி கடத்திச் சென்றனர். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஸ் டோங்கரே உத்தரவின் பேரில் அவரை கடத்திச் சென்ற காரை மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிரமாக தேடினர். ஆண்டிபட்டி புள்ளிமான் கோம்பை ரோடு வழியாக சென்ற வாகனத்தை போலீசார் துரத்திச் சென்றபோது வைகை புதூர் பிரிவில் கடத்தல் கும்பல் அதிசயத்தை கீழே தள்ளிவிட்டு சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அதிசயத்தை சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான்பாட்சா மீட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தார்.

    இதனிடையே வாகனம் வைகைபுதூர் வழியாக தப்பிச் செல்வதை வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்ததின் பேரில் ஜெயமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் ஒத்தவீடு வழியாக சென்ற அந்த வாகனத்தை மேலக்காமக்காபட்டியில் வைத்து பிடித்தனர். அந்த காரை மதுரை மாவட்டம் திருநகர் சக்களைப்பட்டி நடுத்தெருவை சேர்ந்த தர்மராஜ் மகன் பிரபு (31) என்பவர் ஓட்டிச்சென்றார்.

    அவரை பிடித்து விசாரித்ததில் மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜிநகரை சேர்ந்த திருமுருகன் மகன் அஜீத் (26), அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் கவுசிகன் (22) மற்றும் கூழ் என்ற அழகுசுந்தரம், திருப்பதி ஆகியோர் கூலிப்படையாக இருந்து அதிசயத்தை கடத்தியதாகவும் போலீசார் தங்களை சுற்றி வளைத்ததால் வேறு வழியின்றி அதிசயத்தை கீழே தள்ளிவிட்டதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

    இந்நிலையில் அதிசயம் தோட்டத்தில் காவலாளியாக வேலைபார்த்த சங்கரலிங்கம் (65) என்பவர் நேற்று மாலை தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நாராயணதேவன்பட்டி நடுத்தெருவை சேர்ந்த சங்கரலிங்கம் கடந்த 3 மாதமாகத்தான் இங்கு வேலை செய்து வந்தார். இவரது முதல் மனைவி அங்காளஈஸ்வரி இறந்து விட்டதால் அவரது தங்கையான மீனா (46) என்பவரை 2வது திருமணம் செய்துகொண்டு ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள அதிசயத்திற்கு சொந்தமான தோப்பு வீட்டில் வசித்து வந்துள்ளார்.

    அதிசயத்தை கடத்திய கூலிப்படை பிடிபட்ட சம்பவம் அறிந்ததும் சங்கரலிங்கம் தற்கொலை செய்து கொண்டார். இதனால் கடத்தல் கும்பலுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்து வந்தது. சங்கரலிங்கத்தின் செல்போனில் கடத்தல்காரர்களின் செல்போன் எண்கள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எனவே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கூலிப்படை பிடிபட்டுள்ள நிலையில் கடத்தலுக்கு மூளையாக இருந்தது யார் என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட கூலிப்படையினரை துரித வேகத்தில் பிடித்த போலீசாரை மாவட்ட எஸ்.பி. பாராட்டினார்.

    • சுரேஷின் மனைவி பவானி ஏன் வேலைக்கு செல்லாமல் உள்ளீர்கள் என்று கண்டித்தார்.
    • மனவேதனை அடைந்த சுரேஷ் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு விவேகானந்தா முதல் குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது45). இவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

    சுரேஷ் கடந்த சில மாதங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் சுரேஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதை கண்ட சுரேஷின் மனைவி பவானி ஏன் வேலைக்கு செல்லாமல் உள்ளீர்கள் என்று கண்டித்தார்.

    இதனால் மனவேதனை அடைந்த சுரேஷ் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து சுரேஷின் மனைவி பவானி செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தலைவலி காரணமாக தேவேந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்கொலை குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மறைமலைநகர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட பேரமனூர் விவேகானந்தர் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 50), காவலாளியாக வேலை செய்து வந்தார். தலைவலி காரணமாக நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×