search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடி போதையில் பிளேடால் கையை அறுத்து காவலாளி தற்கொலை
    X

    குடி போதையில் பிளேடால் கையை அறுத்து காவலாளி தற்கொலை

    • வேல்முருகன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
    • குடிபோதையில் பிளேடால் அறுத்து கொண்டது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி தாண்டாம்பா ளையம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (52). அப்பகுதியில் உள்ள ஸ்பின்னிங் மில் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி விஜயா (42). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். வேல்முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மனைவி விஜயாவும், மகனும் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வேல்முருகன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

    மேலும் அவர் குடிபோதையில் கைகள் இரண்டையும் பிளேடால் அறுத்து கொண்டது தெரிய வந்தது.குடிபோதையில் வேல்முருகன் இதுபோல அடிக்கடி ஏதாவது செய்து கொள்வது வழக்கமாம்.

    இதையடுத்து உடனடியாக அவரை மீட்டு சிவகிரி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே வேல்மு ருகன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    Next Story
    ×