search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலைக்கு செல்லாததை மனைவி கண்டித்ததால் காவலாளி தற்கொலை
    X

    வேலைக்கு செல்லாததை மனைவி கண்டித்ததால் காவலாளி தற்கொலை

    • சுரேஷின் மனைவி பவானி ஏன் வேலைக்கு செல்லாமல் உள்ளீர்கள் என்று கண்டித்தார்.
    • மனவேதனை அடைந்த சுரேஷ் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு விவேகானந்தா முதல் குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது45). இவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

    சுரேஷ் கடந்த சில மாதங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் சுரேஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதை கண்ட சுரேஷின் மனைவி பவானி ஏன் வேலைக்கு செல்லாமல் உள்ளீர்கள் என்று கண்டித்தார்.

    இதனால் மனவேதனை அடைந்த சுரேஷ் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து சுரேஷின் மனைவி பவானி செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×