search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Security Suicide"

    • சுரேஷின் மனைவி பவானி ஏன் வேலைக்கு செல்லாமல் உள்ளீர்கள் என்று கண்டித்தார்.
    • மனவேதனை அடைந்த சுரேஷ் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு விவேகானந்தா முதல் குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது45). இவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

    சுரேஷ் கடந்த சில மாதங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் சுரேஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதை கண்ட சுரேஷின் மனைவி பவானி ஏன் வேலைக்கு செல்லாமல் உள்ளீர்கள் என்று கண்டித்தார்.

    இதனால் மனவேதனை அடைந்த சுரேஷ் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து சுரேஷின் மனைவி பவானி செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தலைவலி காரணமாக தேவேந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்கொலை குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மறைமலைநகர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட பேரமனூர் விவேகானந்தர் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 50), காவலாளியாக வேலை செய்து வந்தார். தலைவலி காரணமாக நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×