என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி
Byமாலை மலர்14 Sep 2019 1:56 PM GMT (Updated: 14 Sep 2019 1:56 PM GMT)
விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை பைபாஸ் ரோடு, வானமாமலை நகரைச் சேர்ந்த சொக்கலிங்கம், மாநகர குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
விமான நிலைய பயிற்சி மையத்தில் இருந்து பேசுவதாக எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர், விமான நிலையத்தில் வேலை வாங்கித்தருவதாகவும், இதற்காக பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறினார்.
அதனை நம்பி தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 728 செலுத்தினேன். அதன் பிறகு எனக்கு விமான நிலைய உதவியாளர் வேலைக்கான உத்தரவு தபாலில் வந்தது.
அந்த உத்தரவுடன் விமான நிலையத்திற்கு சென்றேன். அங்கு பணி ஆணையை காண்பித்தபோது அது போலியானது என தெரியவந்தது.
என்னை ஏமாற்றி ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 728 மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை பைபாஸ் ரோடு, வானமாமலை நகரைச் சேர்ந்த சொக்கலிங்கம், மாநகர குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
விமான நிலைய பயிற்சி மையத்தில் இருந்து பேசுவதாக எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர், விமான நிலையத்தில் வேலை வாங்கித்தருவதாகவும், இதற்காக பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறினார்.
அதனை நம்பி தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 728 செலுத்தினேன். அதன் பிறகு எனக்கு விமான நிலைய உதவியாளர் வேலைக்கான உத்தரவு தபாலில் வந்தது.
அந்த உத்தரவுடன் விமான நிலையத்திற்கு சென்றேன். அங்கு பணி ஆணையை காண்பித்தபோது அது போலியானது என தெரியவந்தது.
என்னை ஏமாற்றி ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 728 மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X