என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்ரீவைகுண்டம் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி பலி
Byமாலை மலர்13 Sep 2019 12:48 PM GMT (Updated: 13 Sep 2019 5:27 PM GMT)
ஸ்ரீவைகுண்டம் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி:
நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் காரியாபட்டியை சேர்ந்தவர் மரியான் (வயது 55). இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர் ஆட்டோவில் சரக்குகளை ஏற்றி கொண்டு நேற்று மாலை தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்தார். ஆட்டோவில் நாங்குநேரி பெருமாள்புரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஞானராஜ் (38), பாண்டி (44), தாமஸ் (62) ஆகியோர் இருந்தனர்.
ஆட்டோ ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேய்குளம் பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதில் ஞானராஜ், பாண்டி, தாமஸ் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஞானராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X