search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "auto collapsed"

    கிருஷ்ணகிரி அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் உள்ள பழையபேட்டை கொத்தபேட்ட காலனி பகுதியை சேர்ந்த மேனகா (55), பாஸ்கி(27), பாலு(25) ஆகியோர் கடந்த 6-ம் தேதி ஆட்டோவில் குப்பம் - கிருஷ்ணகிரி சாலையில் சின்னமட்டாரபள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்கள் சென்ற ஆட்டோ எதிர்பாரதவிதமாக நிலை தடுமாறி சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து. இதில் ஆட்டோவில் சென்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அப்போது அவ்வழியே சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேனகா கொடுத்த புகாரின்பேரில், கந்திகுப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் குந்தபுரம் கிராமத்தை சேர்ந்த 35 பேர் ஒரு சரக்கு ஆட்டோவில் நேற்று முன்தினம் அரியலூர் ஒன்றியத்தை சேர்ந்த வைப்பம் கிராமத்திற்கு ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றனர். ஜெயங்கொண்டம் பிரிவு சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. 

    இதில் டிரைவர் உள்பட மொத்தம் 36 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 12 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சியாமளா (வயது 50) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். 

    இந்நிலையில் நேற்று சின்னபிள்ளை என்பவரின் மனைவி இளஞ்சியம்(60) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    தருமபுரியில் பயணிகள் ஏற்றுவதில் முந்தி செல்லும் போது அடுத்தடுத்து 2 ஆட்டோக்கள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
    தருமபுரி:

    தருமபுரி-சேலம் செல்லும் சாலையில் தொழில் மையத்தில் இருந்து எர்ஏ பட்டி பஸ் நிறுத்தம் இடையே இன்று காலை ஆட்டோக்களில் பயணிகள் ஏற்றுவதில் முந்தி செல்லும் போது அடுத்தடுத்து 2 ஆட்டோக்கள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 2 பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த அதியமான் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த 2 பெண்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக 2 ஆட்டோ டிரைவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி அருகே அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றி வந்த ஷேர் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஒருவர் பலியானார். 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை பகுதியில் இருந்து நேற்று முன்தினம் மாலை ஷேர் ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு கிருஷ்ணகிரி பழையபேட்டை மேல்தெரு பகுதியில் வரும் போது ஒரு வளைவில் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. 

    இதில் அந்த ஆட்டோவில் பயணம் செய்த மகாராஜகடை அருகே உள்ள ஆட்டுமந்தை பகுதியை சேர்ந்த சின்னதம்பி(49), சாந்தி(38), மங்கம்மாள்(44), மகாலட்சுமி (55) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று சின்னதம்பி இறந்தார். 

    இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    மோட்டார் சைக்கிள் மீது மோதி ஆட்டோ கவிழ்ந்ததில் டிரைவர் மற்றும் 7 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சண்முகாபுரத்தை அடுத்த சொக்கநாதன் பேட்டை அணைக்கரை வீதியை சேர்ந்தவர் முத்து (வயது45). இவர் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார். இன்று காலை அப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் 7 பேரை ஏற்றிக்கொண்டு தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு வந்து கொண்டு இருந்தார்.

    அங்குள்ள கியாஸ் குடோன் அருகே வந்த போது அங்கு பெட்ரோல் இல்லாமல் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக ஆட்டோ அதிவேகமாக மோதியது. இதனால் ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்தது.

    இதில் ஆட்டோ டிரைவர் முத்து படுகாயமடைந்தார். மேலும் ஆட்டோவில் பயணம் செய்த 7 மாணவ-மாணவிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் அருகே நின்று கொண்டு இருந்த வாலிபர் வெங்கடேசன் ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆட்டோ டிரைவர் முத்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து புதுவை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜித், உதவி சப்-இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மீன் ஏற்றி வந்த லோடு ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து மீன் வியாபாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    ராஜாக்கமங்கலம்:

    வேர்கிளம்பி அருகே மணலிக்கரை ஆற்றூர் கோணத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 45), லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். 

    நேற்று மாலை குமார் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரிகள் லிபின் (24), ஜஸ்டின் (30) உள்பட 5 பேரும், லோடு ஆட்டோவில் கன்னியாகுமரிக்கு மீன் வாங்குவதற்காக வந்தனர். மீன் வாங்கி விட்டு இரவு வீடு திரும்பினார்கள். லிபினும், ஜஸ்டினும் ஆட்டோவின் பின்னால் அமர்ந்திருந்தனர். 

    லோடு ஆட்டோவில் மீன்களை ஏற்றிக்கொண்டு ஈத்தாமொழி மங்காவிளை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது டிரைவர் குமாரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த 7 அடி ஆழம் கொண்ட சானலில் லோடு ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்தது.

    இதில் ஆட்டோவின் பின்னால் இருந்த லிபின், ஜஸ்டின் இருவரும் அதில் சிக்கிக் கொண்டனர். லிபின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். ஜஸ்டின் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 

    இதுபற்றி ஈத்தாமொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த லிபினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தலைகீழாக கவிழ்ந்த ஆட்டோவை கிரேன் மூலமாக இன்று காலை மீட்டனர். அப்போது ஆட்டோவில் இருந்த மீன்கள் சிதறி கீழே விழுந்தது. மீன்களை அந்த பகுதி மக்கள் ஏராளமானோர் எடுத்துச் சென்றனர்.
    நாகையில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கீழ்வேளூர்:

    நாகையை அடுத்த நாகூர் ஆரிய நாட்டு தெருவை சேர்ந்தவர்கள் சிவக்குமார் மனைவி கலா (வயது 35). ஆறுமுகம் மனைவி சுமித்ரா(35). புஷ்பராஜ் மனைவி மகேஸ்வரி(30). ரத்தினவேல் மனைவி ஜெயபிரியா(35). ரமேஷ் மனைவி இன்பவள்ளி(36). இவர்கள் அனைவரும் மீன் வியாபாரிகள்.

    இன்று காலை நாகையில் இருந்து லோடு ஆட்டோவில் மீன் ஏற்றிக் கொண்டு வாஞ்சூரில் விற்பதற்காக வந்துள்ளனர். லோடு ஆட்டோவை மேலவாஞ்சூர் ஆசாரி தெரு பக்கரி சாமி மகன் நாகராஜ்(36) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

    நாகூர் புதிய பஸ் நிலையம் அருகில் லோடு ஆட்டோ வந்தபோது முன்னால் சைக்கிளில் சென்ற வடக்கு பால் பண்ணைச்சேரி கீழத் தெரு சிவக்குமார் மகன் இசால் (வயது17) மீது மோதாமல் இருக்க நாகராஜ் பிரேக் போட்டுள்ளார்.

    இதில் கட்டுப்பாட்டை இழந்த லோடு ஆட்டோ தலை கீழாக கவிழ்ந்தது. நடுரோட்டில் ஆட்டோ கவிழ்ந்ததால் அங்கு நின்றிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த கலா உள்பட 5 பெண்கள் மற்றும் ஆட்டோ டிரைவர் நாகராஜ், இசால் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் காயமடைந்த 7 பேரையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நாகூர் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×