என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது மோதி ஆட்டோ கவிழ்ந்ததில் டிரைவர்- 7 மாணவர்கள் காயம்
புதுச்சேரி:
புதுவை சண்முகாபுரத்தை அடுத்த சொக்கநாதன் பேட்டை அணைக்கரை வீதியை சேர்ந்தவர் முத்து (வயது45). இவர் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார். இன்று காலை அப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் 7 பேரை ஏற்றிக்கொண்டு தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு வந்து கொண்டு இருந்தார்.
அங்குள்ள கியாஸ் குடோன் அருகே வந்த போது அங்கு பெட்ரோல் இல்லாமல் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக ஆட்டோ அதிவேகமாக மோதியது. இதனால் ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதில் ஆட்டோ டிரைவர் முத்து படுகாயமடைந்தார். மேலும் ஆட்டோவில் பயணம் செய்த 7 மாணவ-மாணவிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் அருகே நின்று கொண்டு இருந்த வாலிபர் வெங்கடேசன் ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆட்டோ டிரைவர் முத்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து புதுவை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜித், உதவி சப்-இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்