search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோட்டார் சைக்கிள் மீது மோதி ஆட்டோ கவிழ்ந்ததில் டிரைவர்- 7 மாணவர்கள் காயம்
    X

    மோட்டார் சைக்கிள் மீது மோதி ஆட்டோ கவிழ்ந்ததில் டிரைவர்- 7 மாணவர்கள் காயம்

    மோட்டார் சைக்கிள் மீது மோதி ஆட்டோ கவிழ்ந்ததில் டிரைவர் மற்றும் 7 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சண்முகாபுரத்தை அடுத்த சொக்கநாதன் பேட்டை அணைக்கரை வீதியை சேர்ந்தவர் முத்து (வயது45). இவர் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார். இன்று காலை அப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் 7 பேரை ஏற்றிக்கொண்டு தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு வந்து கொண்டு இருந்தார்.

    அங்குள்ள கியாஸ் குடோன் அருகே வந்த போது அங்கு பெட்ரோல் இல்லாமல் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக ஆட்டோ அதிவேகமாக மோதியது. இதனால் ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்தது.

    இதில் ஆட்டோ டிரைவர் முத்து படுகாயமடைந்தார். மேலும் ஆட்டோவில் பயணம் செய்த 7 மாணவ-மாணவிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் அருகே நின்று கொண்டு இருந்த வாலிபர் வெங்கடேசன் ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆட்டோ டிரைவர் முத்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து புதுவை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜித், உதவி சப்-இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×