search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student injured"

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது பரிதாபம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை, சிப்காட் அடுத்த சோலை நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகன் ஜஸ்வந்த் (வயது 15). இவர் ராணிப்பேட்டை பெல் அருகே உள்ள பள்ளியில் பிளஸ் - 1 படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து பெல் டவுன்ஷிப் பகுதியில் இருந்து அரசு பஸ்ஸில் வந்தார். அப்போது படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

    அப்போது பஸ் படிகட்டில் இருந்து திடீரென மாணவன் தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார்.

    அருகில் இருந்தவர்கள் ஜஸ்வந்தை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டயர் வெடித்து விபரீதம்
    • பொக்லைன் எந்திரம் மூலம் கரும்புகளை அகற்றி மீட்டனர்

    வந்தவாசி:

    வந்தவாசி சுற்றி பல கிராமங்கள் இந்த கிராமங்களில் விவசாய நிலங்களில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்த கரும்புகளை வெட்டி செய்யாறு சக்கரை ஆலைக்கு கொண்டு செல்வது வழக்கம்.

    வந்தவாசி அடுத்த கண்டராயபுரம் கிராமத்தில் விவசாய நிலத்தில் நன்கு வளர்ந்துள்ள கருவுகளை வெட்டி டிராக்டரில் ஏற்றிக்கொண்டு வெங்கடேசன் என்பவர் ஓட்டி சென்றார்.

    வெங்கடேசனின் கல்லூரி நண்பர்கள் குமார், வினோத், வேல்முருகன், ஆகியோரும் டிராக்டரில் பயணம் செய்தனர்.

    எறும்பூர் அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்த போது பின்பக்க டயர் எதிர்பாராத விதமாக வெடித்துள்ளது. அப்போது தாறுமாறாக ஓடிய டிராக்டர் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    டிராக்டரில் அமர்ந்திருந்த குமார் கரும்புகளுக்கிடையே மாட்டிக் சிக்கி கொண்டார்.

    இது குறித்து வந்தவாசி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த அவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் கரும்புகளை அகற்றி கரும்புக்கிடையே அடியில் சிக்கி கிடந்த குமாரை மீட்டனர்.

    காயமடைந்த குமாரை வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.மற்றவர்கள் காயம் இன்றி உயிர் தப்பினர்.

    • கோனூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
    • நேற்று மாலை பள்ளியின் காம்பவுண்ட் சுவர் அருகே, நாகராஜன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி அருகே பெருமாம்பாளையம் காலனியைச் சேர்ந்த மாணவன் நாகராஜன்(16). இவர் கோனூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    நேற்று மாலை பள்ளியின் காம்பவுண்ட் சுவர் அருகே, நாகராஜன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது காம்பவுண்டு சுவரின் மேல் இருந்த கற்கள் மாணவன் நாகராஜன் மீது விழுந்துள்ளது. இதில் மாணவன் படுகாயம் அடைந்தான்.

    இதையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மாணவனை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.
    • சிறுமி தொடர்ந்து வாந்தி எடுப்பதால் பெற்றோர் தரப்பில் விபத்து எப்படி நடந்தது என்று பள்ளியிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் செந்தில் நகரில் வசித்து வருபவர் ஆனந்த். இவரது மகள் சித்திமா (6). அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற சிறுமி படிக்கட்டில் தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.

    ஆனாலும் தொடர்ந்து வாந்தி எடுப்பதால் பெற்றோர் தரப்பில் விபத்து எப்படி நடந்தது என்று பள்ளியிடம் விளக்கம் கேட்டுள்ளனர். சி.சி.டி.வி. கேமரா பதிவை தந்தால் மேல் சிகிச்சைக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

    ஆனால் பள்ளி தரப்பில் சி.சி.டி.வி. கேமரா பதிவை தர விருப்பம் இல்லாமல் பல்வேறு காரணங்களை சொல்லி இழுத்தடிப்பதாக திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

    • பஸ் படிகட்டில் தொங்கியபடி ‘பந்தா’ காட்டும் மாணவர்களை போலீசார் எச்சரித்தும் இது தொடர்கதையாகி வருகிறது.
    • மேல்மருவத்தூர் அருகே இன்று காலை பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர் ஒருவர் நடுரோட்டில் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுராந்தகம்:

    பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    இதனை கண்டிக்கும் பஸ் டிரைவர்கள் கண்டக்டர்கள் மற்றும் பயணிகளிடம் அவர்கள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினந்தோறும் நடந்து வருகின்றன.

    பஸ் படிகட்டில் தொங்கியபடி 'பந்தா' காட்டும் மாணவர்களை போலீசார் எச்சரித்தும் இது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை மேல்மருவத்தூர் அருகே பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர் ஒருவர் நடுரோட்டில் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செய்யூரில் இருந்து அச்சரப்பாக்கம் நோக்கி இன்று காலை அரசு பஸ் (எண்.19) சென்றது. இதில் தனியார் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் பஸ்சின் இரண்டு பக்க படிக்கட்டிலும் தொங்கியபடி பயணம் செய்தனர்.

    மேல்மருவத்தூர் பஸ் நிலையம் அருகே சென்றபோது பஸ்சின் பின்பக்க படிக்கட்டில் தொங்கியபடி வந்த சோத்துப்பாக்கத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் ஒருவர் தவறி நடுரோட்டில் விழுந்தார். அதிர்ஷ்டவசமாக பின்னால் வேறு வாகனங்கள் வராததால் அந்த மாணவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    மாணவர்கள் பஸ்சில் தொங்கியபடி பயணம் செய்வதை பின்னால் வாகனத்தில் வந்த ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்தார். அப்போது மாணவர் தவறி விழும் பதைபதைக்கும் காட்சியும் பதிவானது.

    இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தஞ்சை அருகே நடந்து சென்ற மாணவி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே உள்ள அயோத்திபட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மகள் காவியா (வயது 15). இவர் அருகே உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் வீட்டில் இருந்து வெளியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கிப்பட்டி- அயோத்திப்பட்டி சாலையில் சென்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக காவியா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட காவியா பலத்த காயம் அடைந்தார். 

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    குன்றத்தூர் அருகே இன்று காலை பள்ளி வேன் கவிழ்ந்து 15 மாணவ- மாணவிகள் படுகாயம் அடைந்தனர். டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    குன்றத்தூரில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இன்று காலை குன்றத்தூரை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து மாணவ- மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன் வந்தது. சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் வேனில் இருந்தனர்.

    தரைப்பாக்கம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் வேனில் இருந்த பெண் பணியாளர் குன்றத்தூரை சேர்ந்த சித்ரா, மற்றும் 15 மாணவ - மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.

    அப்பகுதி மக்கள் வேனில் சிக்கியவர்களை மீட்டனர். பின்னர் படுகாயம் அடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பள்ளி வேனை ஒட்டிய டிரைவர் மது போதையில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரை மடக்கி பிடித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசில் ஒப்படைத்தனர்.

    டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தண்டராம்பட்டு அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துள்ளானதில் மணவர்கள் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர்.

    தண்டராம்பட்டு:

    தண்டராம்பட்டு அடுத்த சின்னையம்பேட்டை பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வரும் மாணவ, மாணவிகளை அழைத்து வர பள்ளியில் வேன் உள்ளது.

    இன்று காலை வழக்கம் போல் பள்ளி வேன் மாணவர்களை அழைத்து வர சென்றது. வேனை தானிப்பாடி பகுதியை சேர்ந்த காமராஜ் (வயது 40). என்பவர் ஓட்டிச் சென்றார். வெப்பூர்செக்கடி, மலையனூர்செக்கடி, தானிப்பாடி ஆகிய பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது.

    தானிப்பாடி சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. அப்போது வேனில் இருந்த மாணவர்கள் அலறி கூச்சலிட்டனர்.

    இதில் வேன் டிரைவர் காமராஜ் (வயது 40). சவுந்தர்யா (5). மாலதி (6). சபிதா (7). வெற்றிவேல் (4). ரசிதா (5). சாலினி (7). உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை மீட்டு தானிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    விபத்து பற்றி தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்று பதறியபடி ஆஸ்பத்திரியில் குவிந்தனர். விபத்து குறித்து தானிப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீழ்பென்னாத்தூரில் ஓடும் வேனில் எமர்ஜென்சி கதவு திடீரென திறந்ததால் எல்.கே.ஜி. மாணவி சாலையில் விழுந்து பலத்த காயமடைந்தாள்.

    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சோ.நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல். விவசாயி. இவரது மகள் லக்ஷியா (வயது 4). திருவண்ணாமலை அடுத்த மங்கலத்தில் உள்ள காந்தி நகர் நர்சரி பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கிறாள்.

    தினமும், காலை பள்ளி வேன் வீட்டின் அருகே வந்து மாணவியை ஏற்றி செல்லும். 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை வேன் வந்தது. சீருடையில் புத்தகப் பையை மாட்டிக் கொண்டு தாய்க்கு ‘டாடா’ காட்டிவிட்டு மாணவி வேனில் ஏறி பின் இருக்கையில் அமர்ந்தாள்.

    பள்ளி வேனை டிரைவர் வேகமாக இயக்கியுள்ளார். சோ.நம்மியந்தல் கிராமத்தில் உள்ள ஒரு வளைவில் வேன் திரும்பியது. அப்போது, பின் இருக்கையுடன் இணைக்கப்பட்டிருந்த ‘எமர்ஜென்சி’ கதவு திடீரென திறந்தது. இருக்கை பின்பக்கமாக சாய்ந்தது.

    இருக்கையில் உட்கார்ந்திருந்த மாணவி லக்ஷியா வேனில் இருந்து சாலையில் விழுந்தாள். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. முகம், கை, கால்களிலும் ரத்தக்காயங்கள் ஏற்பட்டு மாணவி உயிருக்க போராடினார்.

    வேனில் இருந்து பள்ளி குழந்தை சாலையில் விழுந்து துடிப்பதை கண்ட அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் பதறிபோய் ஓடி சென்று தூக்கினர். வேன் டிரைவர் சற்று தொலைவில் சென்று வேனை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

    இதையடுத்து, ஒரு காரில் மாணவியை ஏற்றிச் சென்று தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேனை மீட்டு திருவண்ணாமலை எஸ்.பி. அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், வழக்குப்பதிந்து தப்பி ஓடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.

    காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மாலை நல்லபடியாக வீட்டிற்கு திரும்ப வேண்டுமே என்ற கவலை பெற்றோர்களுக்கு அதிகமாகியுள்ளது. காலை, மாலையில் மாணவ, மாணவிகளை ஏற்றும் முன்பாக வேனில் கதவுகள் மற்றும் இருக்கைகள், வேறு ஏதாவது பிரச்சினைகள் இருக்கிறதா என டிரைவர், உதவியாளர் பார்க்க வேண்டும்.

    நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் இயக்கப்படுகிறதா, குழந்தைகளுடன் எப்படி நடந்து கொள்கிறார்கள் என கண்டறிய வேண்டும். ஆனால் குழந்தை விழுந்த இந்த பள்ளி வேன் முழுமையாக பராமரிக்கப்படவில்லை என சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.

    ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி வேன், பஸ்களை போக்குவரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். அப்படி, இந்த பள்ளி வேன் நடப்பு கல்வி ஆண்டில் போக்குவரத்துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதா? என்பது தெரியவில்லை.

    ஏனெனில், ஆய்வுக்கு உட்படுத்தப்படும் வாகன ஓட்டுனர்களுக்கு மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக அழைத்து செல்வது, வாகனங்களை முறையாக கண்காணித்து பராமரிப்பது போன்ற விதிமுறைகள் எடுத்துரைக்கப்படும்.

    இதுசம்பந்தமாக வேன் டிரைவர் மீது மட்டுமின்றி பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் வலியுறுத்தினர்.

    வத்தலக்குண்டு அருகே ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகில் உள்ள பட்டிவீரன்பட்டி வினோபாஜி நகரை சேர்ந்த தங்கபாண்டி, தங்கவேல், பெருமாள் உள்ளிட்ட மாணவர்கள் ஆட்டோவில் மருதாநதி அணை பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

    இன்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ டிரைவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் பள்ளி மாணவர்கள் 2 பேரும், ஆட்டோ டிரைவரும் படுகாயம் அடைந்தனர்.

    காயம் அடைந்த அவர்கள் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்வதே இதுபோன்ற விபத்து நடைபெற காரணமாக உள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    மோட்டார் சைக்கிள் மீது மோதி ஆட்டோ கவிழ்ந்ததில் டிரைவர் மற்றும் 7 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சண்முகாபுரத்தை அடுத்த சொக்கநாதன் பேட்டை அணைக்கரை வீதியை சேர்ந்தவர் முத்து (வயது45). இவர் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார். இன்று காலை அப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் 7 பேரை ஏற்றிக்கொண்டு தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு வந்து கொண்டு இருந்தார்.

    அங்குள்ள கியாஸ் குடோன் அருகே வந்த போது அங்கு பெட்ரோல் இல்லாமல் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக ஆட்டோ அதிவேகமாக மோதியது. இதனால் ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்தது.

    இதில் ஆட்டோ டிரைவர் முத்து படுகாயமடைந்தார். மேலும் ஆட்டோவில் பயணம் செய்த 7 மாணவ-மாணவிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் அருகே நின்று கொண்டு இருந்த வாலிபர் வெங்கடேசன் ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆட்டோ டிரைவர் முத்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து புதுவை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜித், உதவி சப்-இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×