search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வத்தலக்குண்டு அருகே ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் படுகாயம்
    X

    வத்தலக்குண்டு அருகே ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் படுகாயம்

    வத்தலக்குண்டு அருகே ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகில் உள்ள பட்டிவீரன்பட்டி வினோபாஜி நகரை சேர்ந்த தங்கபாண்டி, தங்கவேல், பெருமாள் உள்ளிட்ட மாணவர்கள் ஆட்டோவில் மருதாநதி அணை பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

    இன்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ டிரைவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் பள்ளி மாணவர்கள் 2 பேரும், ஆட்டோ டிரைவரும் படுகாயம் அடைந்தனர்.

    காயம் அடைந்த அவர்கள் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்வதே இதுபோன்ற விபத்து நடைபெற காரணமாக உள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×