என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    தனியார் பள்ளியில் படிக்கட்டில் தவறி விழுந்து 1-ம் வகுப்பு மாணவியின் கால் முறிந்தது: போலீசில் தந்தை புகார்
    X

    தனியார் பள்ளியில் படிக்கட்டில் தவறி விழுந்து 1-ம் வகுப்பு மாணவியின் கால் முறிந்தது: போலீசில் தந்தை புகார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.
    • சிறுமி தொடர்ந்து வாந்தி எடுப்பதால் பெற்றோர் தரப்பில் விபத்து எப்படி நடந்தது என்று பள்ளியிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் செந்தில் நகரில் வசித்து வருபவர் ஆனந்த். இவரது மகள் சித்திமா (6). அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற சிறுமி படிக்கட்டில் தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.

    ஆனாலும் தொடர்ந்து வாந்தி எடுப்பதால் பெற்றோர் தரப்பில் விபத்து எப்படி நடந்தது என்று பள்ளியிடம் விளக்கம் கேட்டுள்ளனர். சி.சி.டி.வி. கேமரா பதிவை தந்தால் மேல் சிகிச்சைக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

    ஆனால் பள்ளி தரப்பில் சி.சி.டி.வி. கேமரா பதிவை தர விருப்பம் இல்லாமல் பல்வேறு காரணங்களை சொல்லி இழுத்தடிப்பதாக திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×