search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே ஆட்டோ கவிழ்ந்து 3 பேர் படுகாயம்
    X

    கிருஷ்ணகிரி அருகே ஆட்டோ கவிழ்ந்து 3 பேர் படுகாயம்

    கிருஷ்ணகிரி அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் உள்ள பழையபேட்டை கொத்தபேட்ட காலனி பகுதியை சேர்ந்த மேனகா (55), பாஸ்கி(27), பாலு(25) ஆகியோர் கடந்த 6-ம் தேதி ஆட்டோவில் குப்பம் - கிருஷ்ணகிரி சாலையில் சின்னமட்டாரபள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்கள் சென்ற ஆட்டோ எதிர்பாரதவிதமாக நிலை தடுமாறி சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து. இதில் ஆட்டோவில் சென்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அப்போது அவ்வழியே சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேனகா கொடுத்த புகாரின்பேரில், கந்திகுப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×