என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூரில் நீர்வரத்து அதிகரிப்பு - சேலம், ஈரோடு உள்பட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Byமாலை மலர்6 Sep 2019 2:39 PM GMT (Updated: 6 Sep 2019 2:39 PM GMT)
மேட்டூரில் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சேலம் :
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகமான நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 80 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில், அணையின் 16 கண் மதகு வழியே இரவு 9 மணி முதல் 2,000 கனஅடி உபரி நீர் திறக்கப்படவுள்ளது.
இதனால் காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், நாகை, ஈரோடு, சேலம், கரூர், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர் , நாமக்கல் போன்ற டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, காவிரி கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X