என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூர் அருகே காற்றில் சாய்ந்த மின்கம்பம் சரிசெய்யப்படுமா?: விவசாயிகள் கோரிக்கை
Byமாலை மலர்5 Sep 2019 4:38 PM GMT (Updated: 5 Sep 2019 4:38 PM GMT)
பெரம்பலூர் அருகே கடந்த வாரம் வீசிய காற்று , மழைக்கு சாய்ந்த மின் கம்பத்தை சரி செய்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ளது எசனை கிராமம். இந்த கிராமத்தில் கடந்த வாரம் வீசிய காற்று, மழைக்கு ஈடுகொடுக்க முடியாமல், எசனை வடக்குப்பகுதி மின் மாற்றிக்கு உட்பட்ட பகுதியில் விவசாயிகளின் வயல்களில் இருந்த 2 மின்கம்பங்கள் வீழ்ந்தன. இதனால் மின் கம்பிகளும் அறுந்து தரையில் விழுந்தன.
இது குறித்து விவசாயிகள் எசனையில் உள்ள மின்வாரிய கிளை அலுவலத்தில் தகவல் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் அறுந்துகிடக்கும் மின் கம்பிகளை அகற்றவோ, முறிந்து விழுந்த மின் கம்பங்களை அப்புறப்படுத்தி புதிய மின்கம்பங்களை நட்டு மின்வினியோகம் செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது குறித்து விவசாயிகள் மின்வாரிய புகார் எண் 1912 மற்றும் 9486111912 ஆகியவற்றிற்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க படவில்லை என்று கூறப்படுகிறது. சுமார் 10 நாட்களாக மின்சாரம் இல்லாமல் விவசாயிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் ஆடு, மாடுகளுக்கு தண்ணீர், கொடுக்க முடியாமலும் ,பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமலும் கஷ்டப்படுகிறார்கள்.
எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின் கம்பத்தை சரி செய்து மின்சாரம் வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X