search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தர்மபுரியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    தர்மபுரியில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தர்மபுரி:

    தர்மபுரி பரிநாதசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் பெங்களூருவில் வீட்டிற்கு உணவு பொருட்களை டோர் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பூஜா (வயது 23). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    சந்தோசுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் காயம் ஏற்பட்டதால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த பூஜா சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூஜாவின் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூஜாவுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆன நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து மாவட்ட சப்-கலெக்டர் சிவன்அருள் விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×