என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்3 Sep 2019 12:36 PM GMT (Updated: 3 Sep 2019 12:36 PM GMT)
தர்மபுரியில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி:
தர்மபுரி பரிநாதசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் பெங்களூருவில் வீட்டிற்கு உணவு பொருட்களை டோர் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பூஜா (வயது 23). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
சந்தோசுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் காயம் ஏற்பட்டதால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த பூஜா சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூஜாவின் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூஜாவுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆன நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து மாவட்ட சப்-கலெக்டர் சிவன்அருள் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X