என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தருமபுரியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி
Byமாலை மலர்28 Aug 2019 11:39 AM GMT (Updated: 28 Aug 2019 11:39 AM GMT)
தருமபுரியில் மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்துள்ள ரெங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது52). கோவில்களுக்கு சிலைகளை செதுக்கும் சிற்பியாக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் முனிராஜ் தனது உறவினர் வீடான தருமபுரி பிடமனேரிக்கு நேற்று மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் ரெங்காரபுரத்திற்கு செல்வதற்காக சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பிடமனேரி பிரிவு சாலை ஓரமான மோட்டார் சைக்கிளை நிறுத்தி முனிராஜ் செல்போனில் பேசி கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னர் மோதிய வேகத்தில் அந்த வாகனம் அங்கு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த முனிராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி இன்றுஅதிகாலை முனிராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தருமபுரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X