search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    பெருந்துறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

    பெருந்துறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே, பவானி ரோடு பூவம்பாளையம்தேவி நெடுஞ்சாலை பிரிவில் நேற்று மதியம் ஒரு முதியவர் ரோட்டை கடக்க முயன்றார்.

    அப்போது அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட அவரை கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இரவு பரிதாபமாக இறந்தார். 60 வயதான அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரியவில்லை. இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×