search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம் பறிப்பு
    X
    பணம் பறிப்பு

    களக்காட்டில் கார் டிரைவரை மிரட்டி பணம் பறிப்பு

    களக்காட்டில் கார் டிரைவரை மிரட்டி பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் முத்துபாலன். கார் டிரைவர். இவர் சம்பவத்தன்று மதியம் களக்காடு அண்ணாசாலையில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ரமேஷ் என்பவர் அரிவாளை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். அதற்கு முத்துபாலன் மறுத்துள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் அரிவாளை முத்துபாலனின் கழுத்தில் வைத்து மிரட்டி அவரிடம் இருந்த ரூ.2,300 மற்றும் அவர் அணிந்திருந்த ரூ.6000 மதிப்புள்ள வாட்ச் ஆகியவற்றை பறித்து சென்று விட்டார்.

    இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சபாபதி, எஸ்.ஐ. லிபிபால்ராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி இதுதொடர்பாக ரமேஷை கைது செய்தனர்.

    Next Story
    ×