என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆண்டிப்பட்டி பகுதியில் விடிய விடிய மழை
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் பருவமழை ஏமாற்றியதால் நீர் நிலைகள் வறண்டு குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் விவசாயிகளும் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆண்டிப்பட்டி பகுதியில் சாரல் மழை பெய்தது.
நேற்று இரவும் ஆண்டிப்பட்டி, பாலக்கோம்பை, கோவில்பட்டி, தெப்பம்பட்டி வைகை அணை க.விலக்கு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாரலாக தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய விடிய பெய்தது. இதனால் குளிர்ச்சி ஏற்பட்டது.
குடிநீருக்காக ஏங்கிய பொதுமக்களுக்கு இந்த மழை நிம்மதியை தந்துள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் நிலங்களை உழுது பணிகளை தொடங்கியுள்ளனர். நேற்று மட்டும் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒரே நாளில் 65 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் சென்றதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மேலும் ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி அருகே புதிய ரெயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்