என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆரணியில் தொடர்மழை மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
ஆரணி:
ஆரணி அடுத்த பையூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பாலசுந்தரம் மகன் வெங்கடேசன் (வயது 29). கூலி தொழிலாளி. பையூரில் பெற்றோருடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் வெங்கடேசன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். அப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக வீட்டில் செல்லும் மின்சார ஓயரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.
அப்போது வெங்கடேசனின் கை மின்ஒயரில் பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் வெங்கடேசனை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வெங்கடேசன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஆரணி தாலுகா போலீசார் விரைந்து வந்து வெங்கடேசன் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் பையூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்