search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி
    X
    தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி

    மார்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

    மார்த்தாண்டம் அருகே மாடுகளை குளத்தில் குளிப்பாட்டுவதற்காக சென்ற தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியானார்.
    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி வலியத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 59). தொழிலாளி. இவர் தனது வீட்டில் உள்ள மாடுகளை அருகில் உள்ள குளத்தில் குளிப்பாட்டுவதற்காக சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி ராஜேந்திரன் பலியாகி விட்டார். 

    இதுபற்றி புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×