என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரை அருகே மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பலி
மதுரை:
மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் கோவில் படித்துறையைச் சேர்ந்தவர் கோபால்(வயது 61). தச்சு தொழிலாளி இவர், தல்லாகுளம் முல்லை நகர் நேதாஜி தெருவில் உள்ள முன்னாள் ராணுவ வீரர் குடியிருப்புக்குச் சென்றார்.
அங்குள்ள ஒரு வீட்டிற்கு ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைத்தபோது, எதிர்பாரத விதமாக மின் கம்பியில் கை பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து கோபால் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கோபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை எச்.எம்.எஸ். காலனி ஆனந்தா நகரை சேர்ந்தவர் சரவணகுமார்(36). இவர் கோச்சடை பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக சரவணகுமார் மீது மோதியது.
இதில் பலத்தகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணக்குமார் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்